| |
Recently discussed
(0 minutes ago)HDFCHDFC ATM NOT ISSUE CASH BUT CASH DEDUCT FROM ACCOUNT (1 minutes ago)BESCOM JP NAGARbescom meter reader misbehaving with the consumer and harsssing the consumer by improper billing (2 minutes ago)HDFCCredit Card
Latest News
Worst rating
Complaints with most comments
Vodafone (16) find anumber details & address
Stay away
Free Online Indian Classifieds
|
paazee.in Complaints - WHY paazee thiupur based really paying their customers |
| View all paazee.in complaints |
paazee.in |
|
Posted: 2009-08-08 by JBALA Send email |
|
|
|
WHY paazee thiupur based really paying their customers
PAAZEE forex trading ltd tirupur they are really paying their customer . monthly 25% assured principal return back within 6 months . All are given post dated cheques . pl contact jbala 9361501115
9952175594
|
Read comments |
Add a comment |
More paazee.in complaints
|
Comments |
|
டெபாசிட் தொகை திரும்ப வழங்க கோரி
நிதி நிறுவன இயக்குனர்
வீடு முற்றுகை முயற்சி
திருப்பூர், மார்ச் 17:
முதலீடு தொகையை திரும்ப வழங்க கோரி, நிதி நிறுவன இயக்குனர் வீட்டை முற்றுகையிட முயன்ற முதலீட்டாளர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரே டிங்‘ எனும் நிதி நிறு வனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக அறிவித்து செயல்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவன இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
இது தொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி. தலை மையில் தனி குழு அமைத்து, டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பண வினியோகிக்கும் பணியின் போது, சுமார் 4 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளா தார குற்றப்பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் அனைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பண வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தையடுத்த பாப்பா நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனராக கதிரவன், மோகன் ராஜ் ஆகியோர் தங்கியுள்ள வீட்டை முதலீட்டாளர்கள் நேற்று முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை முதல் அங்கு ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டனர். திருப்பூர் டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் பாப்பா நகர் பகுதியிலும், திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் பாசி நிதி நிறுவனம் அமைந்துள்ள அவிநாசி ரோட்டிலும் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் முதலீட்டாளர் 12 பேர் அங்கு கூடினர். “திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். நாங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்க கோரி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நிறு வனம் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என தெரியவில்லை, “ என்றனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த 20க்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஏராளமானோர் முற்றுகையிட வரக்கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைமறியலில் ஈடுபடக்கூடும் என்பதால் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும், கோவை பொருளா தார குற்றப்பிரிவு காவல் மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே விசா ரிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
முதலீட்டாளர்கள் கைது திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாப்பா நகர் பகுதியில் முதலீடு தொகையை திரும்ப வழங்க கோரி, நேற்று பாஸி நிதி நிறுவன இயக்குனர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர் |
Dinakaran Dt 17.03.2010
‘பாசி’ நிறுவன முறைகேடு இன்று முதல் புகார் தரலாம்
கோவை, மார்ச் 17:
கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் மோதிலால் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி டிரேடிங் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து இன்று(17ம் தேதி) முதல் புகார் பெறப்படவுள்ளது. புகார் பெறுவதில் இடையூறு இருந்தால், அதை நிவர்த்தி செய்து பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மனு பெற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு புகார்கள் பெறப்படுகின்றன.
மனுதாரர்கள், நிறுவனத்தில் முதலீடு செய்த தொகைக்கான அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் நகல்கள், ஒப்பந்தம் ஏதேனும் செய்திருந்தால், அதற்கான ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்களை வழங்கவேண்டும்.
முதலீட்டாளர்கள் யாருடைய பெயரில் பணம் செலுத்தியுள்ளனரோ, அல்லது யாருடைய நிறுவன பெயருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே புகாரை கண்டிப்பாக வழக்கின் அதிகாரியை நேரில் சந்தித்து கொடுக்கவேண்டும். |
Dinamalar Dt 17.03.2010
பாசி பாரக்ஸ் நிதி நிறுவனம் மீது இன்று கோவையில் புகார் தரலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை
கோவை: "பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இன்று முதல் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரலாம் என, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பாசி பாரக்ஸ் டிரேடிங் கம்பெனி மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்தது. திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, இதன் நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டி.ஜி.பி., லத்திகாசரண் உத்தரவில் இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையை துவக்கியுள்ள கோவை பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இன்று முதல் கோவையில் (மார்ச் 17) புகார் தரலாம். இதில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். புகார்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அலுவலகத்தில், பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ன் நேரடி கண்காணிப்பில் பெறப்படும்.
பணம் செலுத்தி ஏமாந்த டிபாசிட்தார்கள் தங்கள் புகார் மனுவுடன் நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்த தொகைக்கான அசல் ஆவணங்கள் மற்றும் அதன் நகல், கம்பெனி ஏஜன்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றிய எழுத்து மூலமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவே புகார் பெற இயலும் என்பதால், சூழ்நிலைக்கேற்ப பிறப்பிக்கப் படும் உத்தரவுக்கு முதலீட்டாளர்கள் கட்டுப்பட வேண்டும். யாருடைய பெயரில் பணம் செலுத்தப்பட்டதோ, யாருடைய பெயருக்கு கம்பெனி செக் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர் மட்டும் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தர வேண்டும். இவ்வாறு, கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. |
| There is no clear information.I think our money r gone |
| இப்படி புகார் எத்தனை தடவை கொடுப்பது.பணம் கொடுக்க தாமத படுத்தவா?கொடுக்காமல் இருக்கவா? |
| vadivelu joke: avan avan edukara mudivu enakku sadakamagave irukku. Hence mohan raj will always be the winner. onna yarum asachuka mudiyathu da. ippadiye continue pannu. Mahathma gandhi ku jey jey jey |
| I already given the complaint to Tirupur SP office Feb'10 last week along with relevant documents required by the police. Whether I have to once again approch Coimbatore ECW for compliant. Or my existing complaint is valid for getting my money. Any body knows please clarify by posting for my further action. |
| I'm from chennai, to give the complaint I went 3 times to Tiruppur I send nearly RS 3000, again we have to give the complaint to Coimbatore I have spend again. We already lost our money with paazee, also now we are spending our money to get our money...!!! this Big Thief Mr. Mohanraj is safe... |
| எதுக்கு மறுபடியும் புகார், அட என்னப்பா இது.பேப்பர் நல்ல விலைக் போகுமா?? |
Malaimalar Dt 17.03.2010
கோவை பொருளாதார குற்ற பிரிவு போலீசில் பாசி நிறுவனம் மீது 1 மணி நேரத்தில் 100 பேர் புகார்
கோவை, மார்ச். 17-
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி பாரக்ஸ் டிரேடிங் கம்பெனி என்ற தனியார் நிறவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் இருந்தனர்.
இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினர். அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பாசி நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாசி நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அலுவலகத்தில் இன்று முதல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
புகார் கொடுக்க ஏராளமானோர் இன்று குவிந்து இருந்தனர். காலை 10 மணிக்கு புகார்கள் பெறப்பட்டது. 1 மணி நேரத்துக்குள் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் புகார் மனுவுடன் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த தொகைக்கான அசல் ஆவணங்கள் மற்றும் அசல் நகல், கம்பெனி ஏஜெண்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றிய எழுத்து மூலமான ஆவணங்கள் ஆகியவற்றை அளித்தனர். புகார் மனு குவிந்த வண்ணம் உள்ளது |
Paazee news in 18/03/2010 dinakaran
பாசி நிறுவன மோசடி புகார் ஒரே நாளில் 300 பேர் மனு
கோவை, மார்ச் 18:
திருப்பூர் பாசி டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமார்ந்த 300 பேர் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போசில் புகார் கொடுத்தனர்.
திருப்பூர் பாசி டிரேடிங் நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கோவையில் தனிப்பிரிவும், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் பொருளாதார குற்றப்பிரிவுகளிலும் நேற்று முதல் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளான நேற்று மட்டும் 300 பேர் மனு கொடுத்தனர்.
ஏற்கனவே திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தியபோது புகார் கொடுத்திருந்த பலரும் நேற்று மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்களை பெற்ற பின்னர் கோவை மாவட்டத்தினரிடமும் மனு பெறப்படும் என போலீசார் தெரிவித்தனர். |
Thalai eluthu!! Ithu elam thevai thanna?
As per wat economic wing says, If U have got any commissions before, The Priciple amount will be given subracting the Commission amount u have got already. Also those who have got Spot commissions are going to be questioned and have to give the money back.
If u have re-invested in SAANCHO, then its Hell a job in writting your complaint statement. I am sure u ll get money but may be after one or two Years time, Also dont expect u will get the amount completely.
MOHANRAJ will suffer Soon!!! |
| any news about madurai eow.if any body given complaints in madurai.if we give original to them what is the proof for us.anybody know y they r asking original?pls reply me. |
| any one invest in paazee with Trichy Murugasan (Agent). Kindly revert back, any refund status. He is saying some story. |
IN viruthunagar, where is located SBoffice?. I think it isthe another drama of paazee. I have no confidence for our hard earn
money. god gives a good punishment for me. Ihave little confidence for past 7 months .but our money is gone to thief mohanraj . |
Dinamalar Kovai dt 18.03.2010
மோசடி நிறுவனம் மீது புகார் தர குவிந்தது கூட்டம் : களை கட்டியது கமிஷனர் அலுவலக வளாகம்
கோவை: 'பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிறுவனத்தில் டிபாசிட் செய்து ஏமாந் தவர்களிடம் இருந்து புகார் மனு பெறுவது துவங்கியதால், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகம் நேற்று களை கட்டியது.
திருப்பூரை சேர்ந்த 'பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிதி நிறுவனத்தில் தொழிலாளர்கள், தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்தனர். உறுதி அளித்தபடி டிபாசிட் தொகைக்கு வட்டி தராமல் இழுத்தடித்ததால், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர்.போலீஸ் விசாரித்து, 'பாசி பாரக்ஸ்' நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டு பிடித்தனர். இதன் இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் மனுக்களை பெறத் துவங்கினர்.திருப்பூரில் 29 ஆயிரத்து 700 மனுக்கள் பெறப்பட்டன. பிற மாவட்டங்களில் 30 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. மிகப் பெரிய மோசடி நடந்திருப்பதைத் தொடர்ந்து சமீபத்தில் கோவை வந்த டி.ஜி.பி., லத்திகாசரண் வழக்கின் விசாரணையை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் புகார் மனுக்களை பெற தனி அலுவலகம் அமைக்கப்பட்டது.
டி.எஸ்.பி., மோதிலால் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐந்து சப்- இன்ஸ்பெக்டர்கள் குழு நேற்று முதல், 'பாசி பாரக்ஸ்' நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறத்துவங்கியுள்ளது.முதல் கட்டமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 170 பேரிடம் புகாரை பெற்றது. புகார் கொடுக்க வந்தவர்களிடம் மாதிரி புகார் மனுதரப்பட்டது. மனுவின் நகலுடன், நிதி நிறுவனத்தில் 'டிபாசிட்' செய்ததற் கான அசல் ஆவணங்கள், நகல், கம்பெனி ஏஜன்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், எழுத்து மூலமான ஆவணங் களை இணைத்து தர அறிவுறுத்தினர்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவே புகார் பெற இயலும் என்பதால், 'சூழ்நிலைக்கேற்ப பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு முதலீட்டாளர்கள் கட்டுப்பட வேண்டும்' என முன் கூட்டியே கூறியிருந்தனர். திருப்பூர், சோமனூர், பல்லடம் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புகார்தாரர்கள் நேற்று ஏராளமாக குவிந்தனர்.திருப்பூர் மாவட்டத்தைத் தவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 'டோக்கன்' கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் ஆஜராகுமாறு கூறினர்.
பொருளாதாரக்குற்றப்பிரிவு அதிகாரி கூறுகையில், ' இவ்வழக்கில் பல ஆயிரம் புகார்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். தினம் 50 மனுக்கள் மட்டும் பெற முடியும். 'இருப்பினும், முதல்நாளான நேற்று 170 மனுக்களை பெற்றோம். அடுத்து வரும் நாட்களிலும் மனுக்களை பெறுவோம். 'தவிர, மாநிலம் முழுதும் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., க்கள் தலைமையிலும் 'பாசி பாரக்ஸ்' நிறுவனம் மீதான புகார் மனு பெறப்படும். அனைத்து மனுக்களும் பெறப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகே, கோவையில் விசாரணை நடத்தப்படும்' என்றார்.கோவை கமிஷனர் அலுவலக வளாகத்தில் புகார் அளிக்க வந்த கூட்டம், அதிகமாக இருந்தது. கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியே உள்ள 'ஜெராக்ஸ்' கடையில், வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. |
Dear SARAN, CALVINRIJU, NENJU AND OTHERS. . .
DO YOU AGREE THAT WHETHER WE HAVE TO GIVE OUR ORIGINAL CHEQUE WITH THE COMPLAINT TO COMMISSIONER OFFICE AT COIMBATORE. IF SO ANY ONE HAS GIVEN ALREADY PLS POST YOUR GUIDANCE AS WE MAY FOLLOW THE SAME AND ADVICE WHETHER TO GIVE THE ORIGINAL OR NOT, AS IT IS THE ONLY PROOF FOR US IN PAAZEE.
ALSO, IAM AT MADURAI, SHOULD WE GIVE THE COMPAINT ALONG WITH THE ORIGINAL CHEQUE TO EOW LOCATED AT ANNA NAGAR IN MADURAI. OR FOR THE SAFE SHALL WE GO AND SUBMIT IT TO THE COMMISSIONER OFFICE AT COIMBATORE .
PLS YOU PEOPLE ADVICE ME IN THIS REGARDS. . . WELLWISHER |
| paazee invest many is gone |
| DON'T GIVE YOUR ORIGINAL CHEQUE!!!It is confirmed that paazee is looking to file insolvency pettion in Chennai High court. |
Dear Paazee Investors, In this forum, We are daily reading various Tamil newspaper clippings on Paazee situation.All of Tamilnadu know that Paazee cheated all of us.BUT NO ACTION AGAINST PAAZEE MDS MOHANRAJ & KAMAVALLI.??????????
At beginning Tirupur Police said that they not received any single complaint against Paazee mds-thats why they not taking any action. In FebruaryTirupur SP office received 30000 complaints.BUT STILL CHEATING MOHANRAJ IS FREE????????
THE ULTIMATE SUFFERERS ARE PAAZEE INVESTORS
INDIA IS BIG A CORRUPT COUNTRY.PAAZEE WILL PROOF THIS STATEMENT.RICHER BECOME RICHER.POOR BECOME POORER |
|
Previous | 1...47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55...70 | Next |
|
Latest Questions
Categories
|
|