கடந்த வருடம் ஆரம்பித்த மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறும் நிலையில், சென்னை மேற்கு கே கே நகர் வழியாக இயக்கப்படும்
பேருந்துகள் ஓட்டுநர் நடத்துனர்களின் விருப்பம் இயக்கப் படுகின்றன. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பல பேருந்துகள் கே கே டநகர் டிப்போ வில் இருந்து நேராக அசோக் பில்லர் வழியாக சென்று விடுவதால் மேற்கு கே கே நகர் வாசிகள் கடந்த ஆறு மாதத்திற்க்கும் மேலாக அலைக்கழிக்கப் படுகிறார்கள். ஏற்கெனவே இரண்டு பிரதான சாலைகளான ராமசாமி மற்றும் லக்ஷ்மணசாமி சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு பேருந்துகள் இயக்கப் பட்ட நிலையில் எந்த பேருந்து எந்த சாலை வழியாக வரும் என்று தெரியாமல் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. பெண்களுக்கு இலவசப் பயணம் என்று ஆனபிறகு நக்ஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகம் ஏதோ பேருக்கு இயக்கப் படுகின்றன. ஒரு இடத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப் படும் நிலை. யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்பது போல் அரசும், அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களும் செயல் படுகிறார்கள். யார், யாரிடம் சென்று முறையிடுவது ? நீதிமன்றங்களையே மதிக்காத சமூகத்தில் இதை சகித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. Was this information helpful? |
Post your Comment