Address: | 1/635 , Anna Nagar, pamban |
அனுப்புனர்:
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்கள்
அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு
தமிழ்நாடு
பெறுநர் ;
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்,
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும்,
தமிழ்நாடு
பொருள் : ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி கோரிக்கை மனு
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ;
தமிழகத்தில் இந்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டது இன்றுவரை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேரடி தேர்வு வைத்தால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மிகவும் பாதிப்படையும் .மாணவர்களிடையே சரியான புத்தக வசதிகள் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தினால் ஆன்லைன் பாடம் சரிவர மாணவர்களுக்கு புரியவில்லை இந்த நிலையில் நேரடி தேர்வு வைப்பது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் முறையில் பாடம் நடத்தினால் ஆன்லைன் முறையில் தேர்வு வைக்க வேண்டும் .மற்ற மாநிலங்களில் ஆன்லைனில் தேர்வு நடப்பது போல் தமிழகத்திலும் இந்த ஒரு முறை அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் சுயநிதி கல்லூரிகளும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சுமார் 10 லட்சம் மாணவர்கள் எதிர்காலம் உங்கள் முடிவில் காத்திருக்கிறது நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம் .விடியல் அரசு மாணவர்கள் வாழ்க்கையில் விடியல் தரும் என்று...
நன்றி Was this information helpful? |
Post your Comment