Address: | 5th street Kalainar nagar,kovil padaagai avadi. |
பெரு மதிப்புக்குரிய உயர் அதிகாரி ஐயா அவர்களுக்கு, இங்கு ஆவடி கலைஞர் நகர் ஐந்தாம் தெருவின் உள்ளே அமைந்துள்ள ஏரியின் முட்புதர்கள் சூழ்ந்துள்ள பகுதியில் தினசரி முப்பது பேர் கொண்ட நபர் கஞ்சா, மது போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடம் செயின் பறிப்பு, செல்போன் திருட்டு போன்ற செயல்களில் பயமின்றி ஈடுபட்டு வருவது இங்கு வசிக்கும் மக்களை நிலை குலைய செய்துள்ளது, மேலும் ஓரிரு தினங்களுக்கு முன் ஏரிக்கு சென்ற சிறுவனை கம்பியால் தாக்கி மோதிரம் பணம் முதலியவற்றை திருடி சென்றுள்ளனர், இந்த குண்டர்களால் கலைஞர் நகரில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது, தட்டி கேட்பவர்களின் வீட்டில் கல் எறிவது, வீட்டின் முன் மலம் கழிப்பது, அவர்கள் வீட்டு பெண்களை வைத்து பாலியல் பழி சுமத்துவது, இவர்களின் முக்கிய வேலை. உயர் அதிகாரி ஐயா உடனே நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய கேட்டு கொள்கிறோம் #AvadiCrime #Goons #Snatchers #kovilpaagai
Was this information helpful? |
Post your Comment