Dec 17, 2017
Complaint marked as Resolved 07162014367
6-12-2017
ஓகி புயலால் பாதிக்கபட்ட மரங்களை எங்கள் பகுதி மின்சார ஊழியர்கள் வெட்டி அகற்ற சொன்னதால் மின்சாரம் இல்லை என்ற நம்பிக்கையில் எனது கணவர் மரக்கிளைகளை வெட்டச் சென்று 110kv மின்சார ஈர்ப்பு ஏற்பட்டு இறந்தார். இவ்விபத்துக்கு மின்சார ஊழியர்களின் அலட்சியமே காரணம். எனவே மின்சார வாரியம் எனது கணவர் இறந்ததற்கு இழப்பீடு தர கேட்டு கொள்கிறேன்.
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
5/44, வெள்ளங்குழி,
சேனங்கோடு,
மணியன் குழி அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்.
ஐயா,
நான் மேற்கண்ட விலாசத்தில் எனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன். ஓகி புயல் தாக்கப்பட்டதால் எங்கள் வீட்டினருகிலுள்ள பல மரங்கள் கீழே சாய்ந்தன. மின் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டது. கடந்த[protected] அன்று மின்சார வாரிய ஊழியர்கள் சில பேர் என் கணவர் திரு.V.நெல்லியப்பன்-ம் "நீங்கள் சாய்ந்திருக்கும் மரங்களை வெட்டி அகற்றினால் இன்று[protected] மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர்". மின்சார வாரிய ஊழியர்கள் கூறியமையால் அனைத்து மின்சாரப்பாதையிலும் மின்சாரம் முற்றிலுமாக தடைசெய்யப்படடுள்ளது என்ற நம்பிக்கையில் எனது கணவர் என்னிடம் தெரிவித்துக்கொண்டு மரத்தை வெட்டி மாற்ற முற்பட்டு சீலாந்தி மரத்தை வெட்டும் போது 110kv உயரழுத்த மின்பாதையில் செல்லும் மின்சாரம் ஈர்ப்பு (Induction) மூலம் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
இவ்வாறு மின்சார விபத்து மூலம் நான் என் கணவரை இழந்ததற்கான காரணம் மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியம் மற்றும் எங்கள் நிலத்தில் 110kv உயரழுத்த மின்சார பாதையானது தாழ்வாக செல்வதே காரணமாகும். எனவே பிற்காலத்தில் இது போன்ற விபத்து நடக்காதவாறு உயரழுத்த மின்சார பாதையை உயர்த்தி தருமாறும், எனது கணவரின் இழப்பிற்கு இணையான நிவாரணம் பெற்று தருமாறும் தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
பூமதி,
திருநந்திக்கரை .