Address: | Kanyakumari, Tamil Nadu, 629402 |
சார், குமரிமாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, மின்மாற்றி எண்-tneb 122 /[protected], raya/ 477. மூலமாக கொடுக்கப்பட்டுள அனைத்து இணைப்புகள கடந்த மூன்று வருடங்களாகவே பழுதுபார்க்கும் நிலையில் இருந்தும்கூட, இதுநாள்வரையில் பல முறை தகுந்த முறையில் புகார்கள் கொடுத்ததும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சிறிய அளவிலான பழுதுகளை சரி செய்ததாக கூறி, நிரந்தரமான தீர்வு எட்டப்படாமல், தினம் தினம் சுமார் 20 ல் இருந்தது 30 முறை மின்இணைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டுகிறது. குறைந்த மற்றும் ஆதிக மின் வருகையால், அணைத்து மின் சாதனங்கள் பழுது அடைந்து வருகின்றன. இங்கு நிரந்தரமாக லைன்மேன் இல்லாமல் திரு.கணேசன் என்பவர் அ.பே.எண்-[protected], [protected], சரியாக வராமலும், இரவில் மின்இணைப்பு பழுது ஏற்பட்டால் காலை 7 மணிக்குதான் மீண்டும் மின்சாரம் வரும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சாலை சந்திப்பு, கடைகள் என அனைத்தும் அப்பகுதியில் அமைத்துள்ளன. இதனால் மக்கள் தினமும் அவதிப்படும் நிலையில், எந்த ஒரு வேலைக்கும் பணம் கேட்டு கொடுத்தால்தான் வேலை நடைபெறும். இல்லை என்றால் பழுது நீக்க படாமல் காலம்கடத்தி துயரம் ஏற்படுத்தி பணம் வசூல் செய்கிறார்கள். இதுவரை தகுந்த நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், மருங்கூர், ஏறவிபுதூர் மக்கள் மற்றும் வியாபாரிகளும் சேர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், அடுத்ததினம் சாலைமறியல் போராட்டம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்து உள்ளோம். எனவே தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மின்இணைப்பு பழுதுகளை சரி செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு, ஊர் கமிட்டி, அனைத்து கட்சிகள், மற்றும் அனைத்து வியாபாரிகள் நலசங்கம், மருங்கூர், ஏறவிபுதூர் ஊர் மக்கள். Was this information helpful? |
Post your Comment