ஐயா வணக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வசூர் ராமாபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் கீரை சாத்து கிராமத்தில் வசிக்கும் மக்களின் குறைகள். இந்த இரண்டு கிராமங்களை சுற்றி சுமார் மூன்று ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முக்கிய இடங்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து ராணிப்பேட்டை இலிருந்து பொன்னை செல்லும் அரசு பேருந்தை அடைந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இவற்றில் பள்ளி சிறுவர்களும் சிறுமிகளும் அடங்குவர். காலையில் அரசு பேருந்து ராணிப்பேட்டையில் இருந்து உன்னை நோக்கி செல்லும் தடம் எண் 11Bவசூர் வழியாக கீரை சாத்து மிளகாய் குப்பம் ஆகிய கிராமங்களை கடந்து கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை முறையாக அழைத்துச் செல்கின்றது. ஆனால் ஆற்காடு பணிமனையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் அரசு பேருந்து தடம் எண் 11A வசூர் வழியாக செல்லாமல் நேரடியாக லாலாபேட்டை ரோட்டை சென்றடைந்து பொன்னை அடைகிறது இதனால் பொன்னை அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அரசு பேருந்தில் பயணம் செய்யமிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் இக்குறையினை நிவர்த்தி செய்து வழிவகை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment