Manmalai Farmers Welfare Association — service

Address:609301

ஐயா,
நாங்கள் நாகப்பட்டினம் மாவட்டம், , தரங்கம்பாடி வட்டம், மடப்புரம் ஊராட்சி(ஆக்கூர் அஞ்சல்)மண்மலை கிராமத்தில் உள்ள ‘மண்மலை விவசாயிகள் நல சங்கம் மூலம் எங்களாது புகார்களை ‘ நாகப்பட்டினம் மாவட்டம், கண்காணிப்பு பொறிஞர், TANGEDCO -விற்கு வருத்தமுடன் தெரிவித்து கொள்கின்றோம்.நாங்கள் விவசாயத்தில், பாசன வசதி இல்லாமல், மழையும் இல்லாமல் மிகவும் பயிர்கள் காய்ந்து கொண்டு வரும் நிலையில், வறட்சியை எதிர் கொண்டு வரும் நிலையில், சாவைத்தான் எதிர் கொண்டு, நமது மக்களுக்கு உணவு உற்பத்தியை கொடுக்க பாடுபட்டு வருகின்றோம்.இன்னிலையில், இயற்கை எங்களுக்கு, மிகுந்த பாதிப்புகளை கொடுத்தது, கடவுள் கொடுத்த வரமாக தற்போது, இருப்பதை ஏற்று கொண்டாலும், நமது, சமூகத்தில் அதிலும் குறிப்பாக, மின் துறையில் உள்ள நல்ல மனிதர்களது உதவிகளை அன்புடன் எதிர் நோக்குகின்றோம்.அந்த வகையில், மேலே சொல்லப்பட்ட கிராமத்தில், ஒரு விவசாயி கலப்பின விவசாயம் ஈடு பட்டதற்காக, கடந்த 23- வருடங்களாக, மின் இணைப்பினையே துண்டித்து உள்ளார்கள்.அதில் விவசாயி நடராஜன் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.அவரது தாயார், கடந்த 23- வருடங்களாக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்சாரம் இல்லாமல், வீட்டில் மின் துண்டிக்கப்பட்டுஇருளில் வாழ்ந்து வந்த நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு, இருளில், கீழே விழுந்து, முதுகு எலும்பு முறிந்த நிலையில், எங்கள் சங்கம் அவரை சென்னைக்கு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, படுத்த படுக்கையாக மகள் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். தேசத்தில், தீவிர வாதிகளை போல, ஒரு விவசாயியை, மின் துறை செய்துள்ளது.உண்மையில் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, நாங்கள் மிகவும் வருத்தப்படுகின்றோம்.

எனவே, மாவட்ட கண்காணிப்பு பொறியாளார் நிலைமையை அறிந்து, விவசாயிகளுக்காக் உதவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கின்றோ.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Tharangambadi, Tamilnadu
    India
    File a Complaint