மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,
நான் கடந்த 13/11/2019 அன்று குன்னூர் நகராட்சிக்கு புகார் மனு கொடுத்திருந்தேன், அந்த மனுவில் g.பாலாஜி என்ற பெயரில் மனு அளிக்கப்பட்டது. மனுவின் விவரம்: குன்னூர் நகராட்சி 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்து வந்த திரு. கோவிந்தன் மற்றும் திருமதி. கமலவேணி என்பவர்களின் வீட்டு கழிவுநீர் மழை நீர் செல்லும் வகையில் நகராட்சி கட்டி தந்தனர். இதுவரை எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த நிலையில் இவர்களின் வீட்டின் முன்புறம் வசித்துவரும் திரு. ராமானுஜம் என்பர் அவரது வீட்டுச் சுவர் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதால் சுவர் பாதிப்படையும் என்று சொல்லி திரு. பாலாஜி த/பெ. கோவிந்தன் என்பவரின் குடும்பத்தாரை மிரட்டி வருகிறார். இதற்கிடையில் வெங்கட் ராஜ் என்பவரின் வீட்டிலிருந்து நகராட்சியின் கழிவுநீர் சாக்கடைக்கு செல்லும் சாக்கடை பாதையையும் அடைந்துவிட்டார். இதனால் சாக்கடை நீர் திருமதி. கமலவேணி என்பவரின் வீட்டின் முன் தேங்கி நின்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்த தகவலை ஒரு வாரத்திற்கு முன்பு குன்னூர் நகராட்சிக்கு நேரடியாகவும், புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே, தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உதவுமாறு வேண்டுகிறேன்.
நன்றி! Was this information helpful? |
Post your Comment