அய்யா வணக்கம்,
நான் திருச்சியில், ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் உள்ள பகுதியில் வசிக்கிறேன். (சீனிவாசா இண்டஸ்டரி வீதி, மேம்பாலம் கீழ்)
இந்த தெரு வழியாகதான், குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், முதியவர் என அனைவரும்.. காலை மற்றும் மாலை வேளையில் நடந்து தென்னூர் செல்கின்றனர்.
இந்த ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் நடை பாதை ஓரம், பல ஆசாமிகள் சிறுநீர் கழித்து மிகவும் அசுத்தம் செய்து வருகின்றனர். அந்த தெருவை கடக்கும் போது மிகவும் அசுத்தமான துரு நாற்றம் தான் வருகிறது. இதனால், மூக்கை மூடி கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த துருநாற்றதினால், நோய் வரும் தொற்றும் அபாயம் அதிகமாக உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, clean india என்ற துறை, இங்கு சிறுநீர் கழிபவர்களை எச்சரித்து, சிறிது நாள் சுத்தமாக வைத்திருந்தது.. அதயும் பொருட்படுத்தாமல், அந்த ஆசாமிகள், சிறுநீர் கழித்து அசிங்க படுத்தி கொண்டுதான் இருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இந்த தெருவில் துப்புறவாளர்கள் யாரும் சுத்தம் செய்வதில்லை. ரோட்டை சுத்தம் செய்யாததால் மண் படிந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், அடிக்கடி மண் சருகி கீழே விழுகின்றனர்.
இதற்கு ஒரு முற்று புள்ளி வைத்து, இந்த தெருவை சுகாதாரமாக வேண்டும் என் தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு,
அப்பகுதில் வசிக்கும் இளைஞன். Was this information helpful? |