மதிப்பிற்குரிய ஐயா/அம்மா அவர்களுக்கு,
வணக்கம்,
நான் குரோம்பேட்டை கிருஷ்ணா நகரில்(ஹஸ்தினாபுரம்) வசிக்கிறேன்.நாங்கள் வசிக்கும் கிருஷ்ணா நகர் 1st மெயின் ரோடு மற்றும் 2வது மெயின் ரோடு முனையில் குப்பைகள் மலை போல் கடந்த மூன்று வாரங்களாக குவிக்கப்பட்டுள்ளது.இதனால் எங்கள் தெருவிற்கு நுழைவது சிரமமாக உள்ளது.மேலும் இது சுகாதார கேடாகவும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.
அத்துடன் கிருஷ்ணா நகர் 1st மெயின் ரோடு செல்லும் வழியில் மழை நீர் கால்வாய் உள்ளது.அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர குப்பைகளும் மூட்டைகளாக போடப்பட்டுள்ளது.இதனால் நீர் தேக்கமடைந்து கொசு உற்பத்தியாகி சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இடமாக உள்ளது.
மேலும் கிருஷ்ணா நகரில் அனைத்து தெருக்களும் மிகவும் அசுத்தமாக உள்ளது
ஆகவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, சுகாதாரமான சூழ்நிலையினை அளித்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.
Was this information helpful? |
Post your Comment