விடுநர் :
ஐ செல்வராஜ் MA, BL,
நம்பர் 11 ஜீவானந்தம் நாலாவது தெரு குமரன் நகர் ஆவடி சென்னை-71
மதிப்பிற்குரிய ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முறையாக அனுமதி பெற்று வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது பக்கத்து வீட்டுக்காரர் திரு சாலமன் சம்பத் s/o D.P.சந்திரமதி என்பவர் அனுமதியற்ற கட்டிடத்தை கட்டி எனது கட்டிடத்துக்கு தொந்தரவு செய்யும் வகையில் செயல்படுவதால் வழக்குகளில் தீர்வு காணப்பட்டு எனக்கும் அவருக்கும் எல்லைகளை நிர்ணயம் செய்து குறியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரு சாலமன் சம்பத் அவர்கள் எங்கள் இடத்திலிருந்து கழிவுநீர் குழாய் கனெக்சன் கொடுப்பதற்கு வந்த ஊழியர்களிடம் பொய்யான விவரங்களைக் கூறி தடை செய்துள்ளார். திரு சந்திரமதி அவர்களின் வீடு அனுமதியற்ற கட்டிடம் ஆகையால் அதுபற்றி நடவடிக்கையை வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே ஆவடி மாநகராட்சி திருமதி DPசந்திரமதி வீட்டை இடிப்பதற்கு ஆவடி மாநகராட்சிஉத்தரவு பிறப்பித்துள்ளது எனவே எங்களது வீட்டின் கழிவு நீர் குழாய் இணைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு ஐ. செல்வராஜ்
Was this information helpful?
No (0)
Yes (2)
Avadi Municipality customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment