நான் சென்னை அருகில் உள்ள குன்றத்தூர் முருகன் கோவில் அருகில் வசித்து வருகிறேன். –“குன்றத்தூர் முருகன் கோவில்” என்று இரண்டு (60A) பேருந்துகள் மட்டுமே பலகை (Board) வைத்து இங்கு வருகின்றது. இப் பேருந்தைத் தவிர இங்கு வரவேண்டிய பெரும்பாலான பேருந்துகள் குன்றத்தூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் இங்கு வரவேண்டிய 88C இங்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு மாற்றாக 88K ஒரு சில சர்வீஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முறையான கால அட்டவணை எதுவும் கிடையாது. அவர்கள் (ஓட்டுநர் மற்றும் நடத்துனர்) நினைத்தால் வருவார்கள், இல்லையெனில் “இப்படியே திருப்புப்பா” என்று சொல்லிவிடுவார்கள். இதனால் தினந்தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இங்கு வாழும் பொதுமக்கள் படும் பாடு சொல்லி மாலாது. எந்தப்பேருந்து கோவில் வரை செல்லும் என்று கேட்டாலும் எங்களுக்கு தெரியாது, எதுவானாலும் Depo-வில் போய் கேட்டுகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் இங்கு வரவேண்டிய 88C, 88K, M88, 88D, 66A, 60E, 566, 578A போன்ற என்ற பேருந்தும் இங்கு வருவதில்லை.
566பேருந்து இயங்க ஆரம்பிக்கும் போது செய்தித் தாள்களில் வாசகம்:-
குன்றத்தூர் முருகன் கோவில் to திருப்போரூர் முருகன் கோவில்
ஆனால் ஒரு நாள் கூட இந்தப்பேருந்து குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இங்கு வந்ததில்லை.
இந்த ஒரு கிலோ மீட்டருக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிக்கும் தொகை ரூ.10/-.
தயவுகூர்ந்து இந்த தகவலை உடனடியாக பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கம்படி கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு,
குன்றத்தூர் வாழ் பொதுமக்கள் Was this information helpful? |
Post your Comment