Address: | Keezhachavadi,thillai vidangan(po),chidambaram(tk),killai(via), 608102 |
மரியாதைக்குரிய தினத்தந்தி குழுமத்திற்கு,
நாங்கள் வசிக்கும் இடம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட கீழச்சாவடி என்னும் கிராமம் இந்த கிராமத்தில் ஏறத்தாழ 200 குடும்பத்திற்கு மேல் மக்கள் வசிக்கின்றனர், இங்கு குடிநீர் என்பது மக்களுக்கு கிடைக்கபெறாத அரியதொரு விஷயமாகவே இருக்கின்றது, இங்கு குடிநீர் குழாய்களில் மக்களுக்கு உப்புதண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யபடுகிறது, இதன் காரணமாக, இந்த கிராமத்தில் அமைந்துள்ள வசதி படைத்த பிரிவினர்கள் டேங்கர் லாரிகளின் மூலம் விநியோகம் செய்யபடும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர், ஆனால் அதே சமயம் வறுமையில் துவளும் பிரிவினர் முன்னே கூறிய தங்களின் குடிநீர் குழாய்களின் மூலம் பெறும் உப்பு தண்ணீரையே தெளிய வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பருகும் கசப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், ஆனால் அதே சமயம் இந்த உப்பு தண்ணீரும் முறையாக சரிவர விநியோகிப்பதில்லை, இதன் பொருட்டு நல்ல தண்ணீர் பிடித்து வருவதற்காக வேலைக்கு செல்லும் இளைஞர்களும், குடும்பமார்களும் நிண்ட தொலைவில் இருக்கும் பக்கத்து கிராமத்திற்கு காலையில் எழுந்து பிடிக்க செல்வது வாடிக்கையாக இருக்கின்றது, இதில் மறைக்ககூடாத விஷயம் என்னவென்றால் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் நிறைவான தண்ணீர் வசதியை பெற்றுள்ளன, ஆதலால் எங்கள் கிராமத்தில் நீண்ட வருடங்களாக தொடரும் இந்த அன்றாட மற்றும் உயிர்நாடியான பிரச்சினையை தீர்க்குமாறு இந்த கிராமத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
கீழச்சாவடி கிராம பொதுமக்கள்
Was this information helpful? |
Post your Comment