Address: | Cuddalore-Chidambaram main road, Old Town, Cuddalore, 607001 |
நான் 2018 ஆம் ஆண்டு 10 ஆவது மாதம் #abt_maruti_ltd #கடலூர் இடம் இருந்து புதிய dzire வாகனம் வாங்கினேன். அப்பொழுது வாகனத்திற்கான காப்பீடு பத்திரத்தை அதற்கு உரிய தரகரிடம் உரிய கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை சமர்ப்பிக்கிறேன் என்று வாகன விற்பனை பிரதிநிதியிடம் கூறினேன். பின் ஒரு நாள் அவர் நிறுவனத்தின் காப்பீட்டு விற்பனை அதிகாரியுடன் என்னை நேரில் அணுகி மாருதி காப்பீடு எடுத்தால் மட்டுமே வாகனத்தை பதிவு செய்ய இலகுவாக இருக்கும் என்று கூறி என்னை அரை மனதாக சம்மதிக்க வைத்தார்.
அச்சமயம் எனது வாகனத்திற்கு 1 வருட வாகன காப்பீடும் 3 வருட 3 ஆம் நபர் காப்பீடும் பதிவு செய்ய பட்டது (மாருதி இன்சூரன்ஸ்-ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட்). அச்சமயம் ௧ வருட காலாவதி கெடுவிற்கு பிறகு 3 ஆம் நபர் காப்பீடு பற்றி விற்பனை பிரதிநிதியிடம் வனவியபொழுது, கெடு முடிந்த பிறகு வாகனத்திற்கான காப்பீட்டை மட்டும் புதுப்பித்தல் போதுமானது 3 நபர் காப்பீடு மேலும் 2 வருடங்கள் கழிந்த பின்னர் புதுப்பித்தல் போதும் என்றும், புதுப்பித்தலின் பொழுது முகவர் சொல்லும் காப்பீட்டு தொகைக்கும் மாருதி இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகைக்கும் வித்யாசம் இருக்குமாயின் அதை அவர் சரி செய்து தருவதாக வாய்மொழியாக உறுதி அளித்து இருந்தார்.
நான் இன்று காப்பீட்டை புதுப்பிக்க முயற்சி செய்யும் பொழுது மாருதி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தொகைக்கும் காப்பீட்டு முகவர் தொகைக்கும் பெரும் வித்யாசம் வந்தது (12, ௦௦௦). மேலும் நான் மீண்டும் ஒரு 3 நபர் காப்பீட்டை எடுக்க வற்புறுத்த பட்டேன். இது தொடர்பாக எனக்கு வாகனத்தை விற்பனை செய்த விற்பனை பிரதிநிதிஇடம் வினவியபொழுது மழுப்பலாக பதில் வந்தது. நான் பொய் வாக்குறுதியில் ஏமாற்ற பட்டு இருக்கிறேன் என்று உணர்ந்த அடுத்த கணம் abt maruti ltd, கடலூர் நிறுவனத்தை நேரில் அணுகினேன்.
அங்கு என்னை எதிர் கொண்ட வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி முதலில் மழுப்பலாக பதில் அளித்தும் என்னை காப்பீடு எடுக்க சம்மதிக்க வைக்கவே முயற்சி செய்தார். எனது தொடர் கேள்விகளுக்கு பின்னர் எனது தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் அவரால் தவறை ஒப்புக்கொள்வதை தவிர எனக்கான தீர்வை கொடுக்க இயலவில்லை. பேச்சுவார்த்தையின் நடுவே சற்றும் சம்மந்தம் இல்லாமல் அந்நிறுவனத்தின் சேல்ஸ் மேனேஜர் குறுக்கிட்டு "வாகனத்தை விற்க விற்பனை பிரதிநிதி ஆயிரம் சொல்லத்தான் செய்வார்கள், வாடிக்கையாளர் ஆகிய நீங்கள் தான் விழிப்புடன் இருக்க வேணடும்" என ஒரு அருமையான விளக்கத்தை அளித்தார் பாருங்கள்... அங்கு தெரிகிறது அந்த நிறுவனத்தின் தொழில் நேர்மை. விற்பனை மேலாளரே இப்படி என்றால் விற்பனை பிரதிநிதியை பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவை இருக்காது... குருவுக்கு ஏற்ற சிஷ்யன்...
இதில் கவனிக்கபட வேண்டியது எனது காப்பீட்டு பத்திர என்னை எனக்கு தர மறுக்கிறார்கள். காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டால் நீங்கள் உங்கள் வாகன விற்பனையாளரை தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார்கள்.
#irda வழி காட்டுதலின்படி இது சட்டப்படி குற்றம் ஆகும்.
காப்பீடு வாங்கிய ஒரு வாடிக்கையாளருக்கு அவரது காப்பீட்டு பத்திரத்தின் என்னை கட்டாயம் வழங்க வேண்டும், தகுந்த காரணங்கள் ஏதும் இன்றி காப்பீட்டை புதுப்பிக்க மறுக்கவும் கூடாது என்று சட்டம் சொல்கிறது.
#abt_maruti_ltd தலைமை அலுவகத்திற்கு தகவல் அளித்தாயிற்று,
#maruti_suzuki தலைமை அலுவகத்திற்கு தகவல் அளித்தாயிற்று,
#irda தலைமை அலுவகத்திற்கு தகவல் அளித்தாயிற்று,
#royal_sundaram_general_insurance தலைமை அலுவகத்திற்கு தகவல் அளித்தாயிற்று,
இப்பதிவை படிக்கும் நண்பர்கள் இதற்கான தீர்வு என்ன என்று தெரிந்தால் கூறுங்கள், அதையும் முயற்சித்து பார்க்கிறேன்.
Was this information helpful?
Post your Comment