Jun 3, 2019
Complaint marked as Resolved வணக்கம்.நான் சிவகாசி கருமன் கோவில் அருகில் உள்ள பராசக்தி நகரில் இருந்து எழுதுகிறேன். என்னுடைய வீட்டு EBஎண்2400122428. இங்கு நான் வீடு கட்டி குடியேறி இரண்டரை ஆண்டு காலம் நிறைவு பெற்றது. இக்காலகட்டங்களில் கரண்ட் சரிவர வருவதில்லை. பலமுறை கம்ப்ளைன்ட் செய்தும் சரியான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இப்பொழுது இங்கு வீடுகளும் நிறைய பெருகி கொண்டு வருகின்றன. இரவில் சரியாக மின்விசிறியும் ஓடுவதில்லை. காலையில் நீர் மோட்டார் ஓடுவதில்லை. சீரான மின்சாரம் இல்லாததால் பல மின் சாதனங்களும் பழுதடைந்து கொண்டு வருகின்றன. மேலும் காலை நேரங்களில் வேலைக்கு மற்றும் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமம் உள்ளது. இதற்கு ஒரு நல்ல தீர்வு நீங்கள் எடுத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Post your Comment