பெருமதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்,
நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே பொன்னி நகரில் வசிக்கிறோம்.
நல்லூர் துணை மின் நிலையம் வாயிலாக எங்களுக்கு மின்சாரம் வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக
எங்கள் பகுதியில் மிக குறைவான மின்சாரமே வருகின்றது. பலவிதமான முயற்சிகள் எடுத்தும் இன்று வரை
எந்த பலனும் இல்லை. மின்சார வாரியத்தில் கேட்டால், எங்கள் பகுதியில் புதிதாக ட்ரான்ஸ்பாரம் போட்ட வுடன்
சரி ஆகிவிடும் என்று இரண்டு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இன்று வரை எதுவும்
வரவில்லை. எங்கள் அனைவரது வீட்டிலும் இருக்கின்ற எல்லா மின்சாதன பொருட்களும் ஒவ்வொரு நாளும் பழுது
ஆகிக்கொண்டே இருக்கின்றது. இங்கு இருக்கின்ற அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மின்சாதன
பொருட்களின் பழுது செலவுக்காக நாங்கள் இன்னும் எவ்வளவு தான் பணத்தை செலவு செய்வது.
தாங்கள் தயவு கூர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொன்கிறோம்.
இப்படிக்கு,
பொன்னி நகர் மக்கள்,
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம் Was this information helpful? |
Post your Comment