வணக்கம் , எனது பெயர் ச.ராஜா 29/08/2022 அன்று நான் எனது அம்மா உடன் ஹொசுர் செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு இரவு 09:30 pm மணி அளவில் வந்தேன். அங்கு ஓசுர்றிக்கு தனியாக எந்த ஒரு பேருந்தும் வரவில்லை, ஆனால் ஓசுர் வழியாக செல்ல கூடிய பெங்களூர் பேருந்துகள் அதாவது 1 to 6 பேருந்துகள் 10 நிமிடங்களுக்கு ஓரு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. எனவே நானும் எனது அம்மாவும் அந்த பெங்களூருக்கு செல்ல கூடிய பேருந்தில் பயணிக்களாம் என்று சென்றபொழுது நடத்துனர்கள் எங்களை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை, நானும் அடுத்தடுத்து 5 பேருத்துகளில் ஏற சென்ற பொழுது அனைத்து நடத்தனரும் கூறியது பெங்களூர் க்கு செல்பவர்கள் மட்டும் ஏறுங்கள் என்று . பின்பு நான் அங்கு இருந்த மேல் அதிகாரியிடம் இந்த பெங்களூர் வழியாக செல்ல கூடிய பேருந்துகளில் ஓசுர்றிர்க்கு நிருத்தம் உள்ளதா என்று கேட்ட பொழுது அந்த மேல் அதிகாரி C.E.O அந்த பேருந்துகளில் ஓசுரில் நிறுத்தம் உள்ளது என்றே கூறினார், பின்பு நான் அவரிடம் புகார் அளித்தேன் இது போல் எங்களை நடத்துனர்கள் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று.அதற்கு C.E.O அதிகாரி அதெல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் சென்று பேருந்தில் ஏறுங்கள் நடத்துனர் ஏதேனும் சொன்னால் நீங்கள் C.E.O அதிகாரி தான் எற சொன்னார் என்று கூறுங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.பின்பு நான் ஓசுர் வழியாக செல்ல கூடிய பெங்களூர் பேருந்தில் ஏறிவிட்டு இரண்டு நபர் அமர கூடிய இருக்கையில் அமர்ந்துவிட்டு அம்மாவை மேலே ஏறி வர சொன்னேன், அப்போது நடத்துனர் என் அம்மாவிடம் விசாரித்தார் எங்கே செல்கிறிர்கள் என்று, அதற்கு என் அம்மா ஓசுர் என்று கூறியதும், உடனே அந்த நடத்துனர் கோபமாக ஏம்மா கீழ இருங்குமா என்று அவமரியாதையாக பேச தொடங்கிவிட்டார்.பின்பு என் அம்மா பேருந்தின் கீழுருந்தபடி என்னை அழைத்தார் பின்பு நான் நடத்துனரிடம் கேட்ட பொழுது, அதற்கு அவர் யோவ் உன்ன யாருயா ஏற சொன்னது மொதல்ல கீழ இருங்குயா என்று கூறினார் நான் அவரிடம் பொருமையாக கூறினேன் நான் உங்கள் மேல் அதிகாரியிடம் கேட்டு விட்டு தான் பேருந்தில் ஏறினேன் என்று . அதற்கு அவர் யோவ் நீ யார்கிட்ட சொன்ன எனக்கு என்ன யா மொதல்ல கீழ இறங்கு யா என்று தரைகுறைவாக பேசினார், இருந்தாலும் பரவாயில்லை என்று நான் என் அம்மாவை மேலே எற சொன்னேன் அதற்கு அந்த நடத்துனர் என் அம்மாவின் கையில் இருந்த பையை பிடித்துக்கொண்டு மேலே ஏற விடாமல் தடுத்தார். பின்பு நானும் அந்த நடத்துனரிடம் வாக்குவாதம் செய்வதற்கான சூழல் ஏற்பட்டது.பின்பு நான் மீண்டும் C.E.O அதிகாரியிடம் நடந்ததை கூறினேன்.பின்பு அவர் வந்து நடத்துனரிடம் கூறிய பின் நானும் எனது அம்மாவும் அந்த பேருந்தில் பயணிக்க முடிந்தது.. இதை நான் ஏன் புகார் அளிக்கிறேன் என்றாள் என்னை போன்று அன்று நிறைய பொது மக்கள், முதியோர் மற்றும் சில பெண்கள் குழந்தைகளுடன் ஓசுர் பேருந்திற்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்து கொண்டு இருந்தனர் அவர்களின் நிலைமை சற்று சிந்தித்துப்பாருங்கள். அப்படியே ஓசுரிற்கு ஒரு பேருந்து வந்தாலும் கூட இளைஞர்கள் சூழ்ந்து கொள்வார்கள் பின்னர் முதியோர் மற்றும் பெண்கள் குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று சற்று தயவுசெய்து சிந்தியுங்கள்.. பின்பு ஓசுர் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர் ஆதலால் அடுத்த நாள் வேலைக்கு செல்வதும் இந்த பேருந்துகளை நம்பிதான் இத்தகைய சூழலில் நடத்துனர்கள் தங்களின் ஒருவர் வேலையை சுளபம்மாக்கிகொள்ள பயணிக்க வரும் பயணியிடம் கோபம் தரைகுறைவாக பேசுதல் போன்ற யுக்திகளை கையாளுகின்றனர் . இதனால் பயணிகளின் வேலைகள் தாமதமாகிறது. பயணிகள் சுளபமாக பயணம் செய்ய வழிகள் இருந்தும் அரசு இது போன்ற தங்கள் வேலையை சுளபமாக்கிகொள்ள கூடிய சுய நலம் நிறைந்த நடத்துனர்களை அரசு எப்படியாவது சரிசெய்துவிடும் என்ற நம்பிக்கையில் கூறுகிறேன்.. நன்றி.. Was this information helpful? |
Post your Comment