Address: | Spot: Pollaachi bus stand, Route number: 44: Date : 05.12.2021; 06:00 AM |
From : Narayanakumar R
154, South Street,
Vijayanarayanapuram,
Seerkatchi post,
TIRUCHENDUR
Thoothukudi - 628208
Mobile number: [protected]
To : Concerned Tamilnadu transport commissioner
Pollaachi depot,
Coimbatore district.
மதிப்பிற்குரிய ஐயா, நான் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு வேலை சம்பந்தமாக நானும் எனது பெற்றோருடன் இன்று (05.12.2021; 06:00 AM) பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு வந்தோம். நாங்கள் இந்த ஊருக்கு புதிது என்பதால் பின்பு அங்கிருந்து வடக்கிபாளையம் என்ற ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிலையத்தில் உள்ள சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் "வழித்தடம் 44" என்கிற நகர பேருந்தில் ஏறுங்கள் அதுதான் வடக்கிபாளையம் ஊருக்கு செல்லும் என்றனர். அவர்கள் சொன்னபடி காலை 06:05 மணியளவில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்குள் வந்தது ஆனால் நகர பேருந்தின் முன்பக்க போர்டை மாற்றாமல் இருந்தது இதனால் உறுதிப்படுத்துவதற்காக வழித்தடம் 44 என்கிற நகர பேருந்தில் உள்ளே இருந்த நடத்துனரிடம் இந்த பேருந்து வடக்கிபாளையம் ஊருக்கு செல்லுமா என்று கேட்டோம் அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை மறுபடியும் கேட்டதற்கு என்னை ஒரு பயணி என்று பாராமல் என்னிடம் அவர் "உனக்கு வேறு வேலை இல்லையா ஏன் காலையில வந்து என் உயிரை வாங்குறா" என்று என்னை அவமதித்து பேசினார் பின்னர் ஏன் என்று கேட்க வந்த என் பெற்றோரையும் குரல் உயர்த்தி அவமரியாதையாக கை நீட்டி பேசினார் அதற்கு நாங்களும் சார் நாங்கள் ஊருக்கு புதிது அதனால் தான் போர்டு வைக்காமல் இருந்ததால் கேட்கிறோம் தயவு செய்து சொல்லுங்கள் என்று பணிவாக கேட்டும் அந்த நகர பேருந்து நடத்துனர் எங்களது பேச்சுக்கு மதிப்பளிக்காமல் எங்களை பேருந்தில் ஏற்றி கொள்ளாமல் போர்டை உடனடியாக மாற்றி கொண்டு பேருந்தை இயக்கி சென்று விட்டார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். ஆகவே சம்பந்தபட்ட நகர பேருந்து நடத்துனர் (பெயரை மறைத்துவிட்டார்) மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரிடம் விசாரணை நடத்துமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.இனி இதுபோல் நடக்காமல் இருக்கவும் அவருக்கு புரியும் விதமாகவும் இருக்க குறைந்தபட்ச தண்டனையாக அவரை சில நாட்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் இவ்வாறு அவமரியாதையாக பேசுகின்ற தமிழ்நாட்டில் பணிபுரியும் மற்ற ஒரு சில அரசு பேருந்து நடத்துனர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
நாராயணகுமார். Was this information helpful? |
Post your Comment