ஐயா வணக்கம்
நான் 09/07/2021 அன்று சேலம் to கரூர் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ( சேலம் மண்டலம் ) பேருந்து எண் : TN 30 N 1658 யில் சேலம் to நாமக்கல் பயணம் செய்தேன். பொதுவாக சேலம் to கரூர் செல்லும் அரசு பேருந்துகள் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும் அரசின் விதி முறை.
ஆதாவது சேலம் to நாமக்கல் 1) சாதாரண கட்டணம் - ரூ .36
2) விரைவு பேருந்து கட்டணம் - ரூ .45
நான் 09/07/2021 அன்று மதியம் 2.50 மணிக்கு சேலத்திருந்து நாமக்கல் பயணம் செய்தேன் என்னிடம் பேருந்து பயண கட்டணமாக ரூ. 45 வசூல் செய்தார்கள். இது சாதாரண பேருந்து ரூ.36 தான் பயணம் கட்டணம் என்று கேட்டத்துக்கு இல்லை இது விரைவு பேருந்து என்று சொல்லி ரூ.45 பயணம் கட்டணம் வாங்கினார் நடத்துனர்.
நான் தற்போது விரைவு பேருந்து ஆகா இயக்குகிறார்கள் என்று நினைத்து விட்டான் .
அந்த பேருந்து TN 30 N 1658 என்னிடம் விரைவு பேருந்து கட்டணம் வாங்கிவிட்டு அந்த பேருந்துதை சாதாரண பேருந்தாக இயக்கினார்கள்.
அதாவது அந்த பேருந்து நின்ற இடம் 1) சேலம் மாநகரின் சில இடங்கள்
2) சிலநாயக்கன்பட்டி பைபாஸ்
3) மல்லூர்
4) ஆண்டாளுர் கேட்
5) புதுச்சத்திரம்
6) புதன் சந்தை
7) முருகன் கோவில் பஸ் ஸ்டாப்
8) நாமக்கல்
இது தான் விரைவு பேருந்து நிற்கும் இடங்களா. என்னிடம் விரைவு பேருந்து ரூ. 45 வசூல் செய்து விட்டு சாதாரண பேருந்து போல் இயக்கிறார்கள்.
சாதாரண பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதை நாமக்கல் நாமக்கல் மேலாளர் புகார் தெரிவிக்க சென்றால் அவர் இல்லை. நேரம் காப்பாளர் சொன்னால் பதில் இல்லை.
இதில் கிளை மேலாளர் மற்றும் பொது மேலாளர் அனுமதி இல்லாமல் நடத்துனர் செயல் பட முடியாது. ஆகையால் இதில் பெரும் ஊழல் இருக்கிறது.
பொது மக்களிடம் தமிழக அரசு பேருந்து கழகம் அதிக பயணம் வசூல் செய்கிறார்கள். இந்த ஊழலை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறான்.
என்னிடம் ரூ.9 அதிக கட்டணம் வசூல் செய்து மேலும் என்னை நாமக்கல் பேருந்து நிலையத்தில் அலைகடித்தார்கள். இந்த ஊழலை தடுக்க வேண்டாம் மற்றும் மேலும் இதற்கு நஷ்டஈடு ரூ.9 வழங்க வேண்டும்.
Was this information helpful?
Post your Comment