அனுப்புநர்:
முருகன் (பத்து ரூபாய் இயக்கம் - மாவட்ட செயலாளர்) Opp: பஸ்கண்டக்டர்
17/D, வேட்டைக்காரன்பட்டி கூட்டுரோடு, வளத்தி, bus no: 216
மேல்மலையனூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604208, TNSTC villupuram(3)-
செல்: [protected] 371528 date 30/08/2023)
பெறுநர்:
மரியாதைக்குரி காவல் ஆய்வாளர் அவர்கள்,
வளத்தி காவல் நிலையம், வளத்தி - 604208
பொருள்: பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி. பயணிகளிடம் பேசுதல், கொலை மிரட்டல் மேலும் அடித்தல் சார்பாக
வணக்கம் ஐயா/அம்மா,
நான் மேற்கண்ட முகவரியில் நிலையாக வசித்துக் கொண்டு வருகிறேன். சம்பவத்தன்று (30/08/2023 ) நான் விழுப்புரத்திலிருந்து Government bus no:216(TNSTC villupuram[protected] date 30/08/2023 03:50:57) வளத்தி வரை பயணம் செய்தேன். பஸ்கண்டக்டர் தரக்குறைவான வார்த்தைகளை பேசி மரியாதை இல்லாமல் பேசி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் என்னிடமும் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி டிக்கெட் கேட்டார், நீ எந்த ஊருக்குப் போகணும் என்று ஒருமையிலும் பேசினார். நீ சேஞ்ஜ் கொடு. சேஞ்ஜ் இல்லாமல் ஏன்டா வரிங்க அப்படின்னு ஒருமையில் பேசினார். மீன் விற்பனை செய்யும் பெண்ணிடம் டிக்கெட் எடுக்காமல் லஞ்சமாக மீனை வாங்கிக் கொண்டார். அவருக்கான டிக்கெட்டும் எடுக்கவில்லை லக்கேஜ்க்கான டிக்கெட்டும் எடுக்கவில்லை. லஞ்சமாக மீனை வாங்கிய விலைக்கே கொடுக்குமாறு அந்த மீன் விற்கும் பெண்ணிடம் வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். அதற்கு கைமாறாக இவர் டிக்கெட்டும் எடுக்கவில்லை. மீனின் எடையளவு 20KG க்கு மேல் இருக்கலாம். பஸ்கண்டக்டர் எடை அளவு செக் பண்ணவில்லை மேலும் லக்கேஜ்க்கான டிக்கெட்டும் கொடுக்கவில்லை. மேலும். மீன் விற்கும் பெண்ணிடமும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பஸ் கண்டக்டர் பேசிக் கொண்டு வந்தார். இதனால் பஸில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் முகம் சுளிக்கும் அளவில் இருந்தது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் சில ஆண்களுக்கும் அருவருக்கத் தகுந்தவாறு இருந்தது. டபுள் மீனிங்ல பேசிக் கொண்டு வந்தார்கள். விழுப்புரத்திலிருந்து. செஞ்சி வரும் வரையில் இவர்கள் ஆபாசமாகமும். வேகமாகமும் பேசி பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் இருந்தது. இதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு வேகமாகவும், ஆபாசமாகவும், டபுள் மீனிங்வுடன் பேசிக் கொண்டு வருகிறீர்களே சற்று குறைவாகப் பேசுங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டேன். மேலும். இது மாறி பேசிக் கொண்டு வந்தால் உங்களுக்கு memo வாங்கி தரப்படும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் அமைதியாக வந்தார்கள். நான் இறங்க வேண்டிய இடம் வளத்தி வருவதற்கு முன்னே பஸ்கண்டக்டர் என்னை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். நான் எனக்கு தெரியும் வளத்தி நீங்களே மேல் கை வைக்காமல் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் ஏற்கனவே நான் பேசியதை. மனதில் வைத்துக்கொண்டு. என்ன பிடித்து தள்ளினார். ஏன் இப்படி செய்கிறீர்கள்? நீங்கள் பேசியது தவறு. பப்ளிக் பிளேஸ்யில் ஆபாசமாக பேசாதீர்கள். இது மாதிரி பேசினால் உங்கள் மீது எப் ஐ. ஆர் கூட போடலாம் என்று சொன்னதற்கு. அவர் மேலும் கோபமடைந்து பஸ்சை நிறுத்தி விட்டு அடிக்க ஓடி வந்தார்.
மேலும் அவர் என்னை கொலை செய்து விடுவேன் உன் முகவரியும் மற்றும் போன் நம்பர் கொடு என்று கேட்டார். நான் வாங்கல் பக்கத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று சொன்னதற்கு. ஆனால் அவர் வர மறுத்து என்னை தரக்குறைவாக பேசி விட்டு. மேலும் கொலை மிரட்டல் விட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார். இதனை முறையாக விசாரித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோன். மேலும் அனைத்து பயணிகளிடம் டிக்கெட் எடுக்குமாறும் லக்கேஜ் 20KGக்கும் மேல் கேள்விகளுக்கு டிக்கெட் எடுக்குமாறும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பயணிகள் எடுத்துவரும் லக்கேஜ்க்கு எடை அளவு 20kg க்கு மேல இருந்தாதான். அதற்கு கட்டாயமாக கிரிக்கெட் போடுமாறு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொது இடத்தில். பொது மக்கள் முன்னாடி, தரக்குறைவாக பேசி என்னை அவமானப்படுத்தி என்னை மன உளைச்சல் ஏற்படுத்திய இந்த பஸ் கண்டக்டர்விடமிருந்து மான உளைச்சலுக்காக நஷ்ட ஈடு தொகையாக ரூபாய் 5, 00, 000 பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இடம்: வளத்தி அன்புடன்,
தேதி: 30.08.2023 முருகன் (பத்து ரூபாய் இயக்கம் - மாவட்ட செயலாளர்)
Copy to:
1) Villupuram DM
2) Consumercomplaints online
3) Valathi police station
Was this information helpful?
Post your Comment