Address: | Panruti taluk Cuddalore district Tamilnadu-607104 |
ஐயா, வணக்கம்,
நான் தினமும் பணிக்கு சென்று வர கடலூர் பண்ருட்டி (பாலூர், திருவந்திபுரம் வழி) அரசு பேருந்துகளை(பேருந்து எண் 16)நம்பி இருக்கிறேன். மேலும் இடையில் உள்ள பல கிராம மக்கள் போக்குவரத்து க்கு இந்த பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக பேருந்துகள் சரியான நேர இடைவெளியில் வருவது இல்லை.
*குறிப்பாக பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் peak hours என்னும் காலை மாலை நேரங்களில் நேர அட்டவணையை சற்றும் பின்பற்றுவதில்லை.* உதாரணமாக *தினமும் மாலை 6.10மணிக்கு பிறகு அடுத்த பேருந்து வர 7.45மணி ஆகிறது. அப்போதும் கூட ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 5 முதல் 6 பேருந்துகள் பண்ருட்டி பேருந்து நிலையம் வந்து சேர்கின்றன.
வந்த பிறகும் மீண்டும் கடலூர் புறப்பட " யார் முதலில் எடுப்பது? "என ஓட்டுநர்கள் போட்டியிடுகின்றனர்.
பிறகு 6 பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் புறப்படுகிறது.
இதனால் கிராம புற மக்களும் பணிக்கு சென்று வருவோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் 5 கிமீ முதல் 10 கிமீ பயணம் செய்வதற்கு கூட 2 மணி நேரம் பேருந்து நிலையத்தில் நின்றபடியே காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள் முழுதும் பணி செய்து களைத்து வரும் ஆண்களும் பெண்களும் பேருந்துக்காக மேலும் 2 மணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை. பண்ருட்டி கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் சற்று அமர கூட இருக்கை வசதி இல்லை என்பது கூடுதல் கொடுமை.
இலவச பயண திட்டத்தால் தான் இவ்வாறு நடப்பதாக பெண்களே குமுறுகிறார்கள்.. இதுபற்றி நடத்துனர் களிடம் கேட்டால் சற்றும் மதிப்பதில்லை.. "எங்கு வேண்டுமானாலும் போய் complaint பண்ணிக்க" என தர குறைவாக பதில் வருகிறது.
*நேர கண்காணிப்பாளரிடம் பல முறை கேட்டாலும் "வரும், பஸ் வரும்போது வரும், " என சற்றும் மக்களின் கேள்வியை பொருட்படுத்துவதே இல்லை.*
.
எனவே தாங்கள் தயவுசெய்து இதற்குரிய சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
சரியான நேர இடைவெளியை பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அதனை நேர கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
கடலூர் - பண்ருட்டி
இடையே பயணிக்கும் மக்கள். (பேருந்து எண் :16, பாலூர் வழி) Was this information helpful? |
Post your Comment