டி.சிந்துகுமார்,
பாரதி கம்யூனிகேஷன் ஸ்பாட்,
காங்கரை, திருவட்டார்,
கன்னியாகுமரி மாவட்டம்.
செல்:[protected], [protected],[protected]
பெருமதிப்பிற்குரியீர்,
வணக்கம்.
நான் மேற்கண்ட முகவரியில் செல்போன் ரீடைலர் கடை நடத்தி வருகிறேன். பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் கார்டுகளுக்கு அடுத்த படியாக வோடாஃபோன் கார்டுகள்தான் அதிக அளவில் விற்பனை செய்துவருகிறேன். மாதம் 20 ஆக்டிவேசன்களுக்கு குறையாமல் செய்து வருகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு குலசேகரம் ஜேபிஆர் ஏஜென்சி டிஸ்டிரிபியூட்டர் மூலமாக வோடபோன் 225 கலர் மொபைல் (ரூ.1400) ஒன்றை வாங்கியிருந்தேன். இரண்டாவது நாளிலேயே அந்த மொபைல் பழுதடைந்ததால் சேல்ஸ்மேன் கிளாட்வினிடம் மொபைலை திருப்பிக்கொடுத்து சரிசெய்யக்கூறியிருந்தே�...⇄ மூன்றுமாதமாகியும் மேற்படி மொபைல் போனை சரிசெய்து தரவில்லை.மேற்படி மொபைலை விலைக்கு வாங்கியிருந்த நம்பூதிரி என்பவர் தினமும் எனது கடைக்கு வந்து பணத்தை திரும்பத்தாருங்கள் அல்லது என்னுடையை மொபைலை கொடுங்கள் என்று பலமுறை கேட்டுவந்தார். இந்நிலையில் கடந்த 13.1.2009 அன்று கடையில் சேல்ஸ்மேன் கிளாட்வின் மொபைல் போன் குறித்து கேட்டபோது எனக்கு மொபைல்பற்றி ஒன்றும் தெரியாது.. எனக்கு கார்டு சேல்ஸ் செய்வதுதான் வேலை. மொபைல் போனை சரி செய்ய வேண்டியது உங்கள் வேலை என்றார்.நான் எனது கடைக்கு தேவையான ரீசார்ஜ் கார்டுகளை தந்தபோது அவரிடம் மொபைலுக்கான ரூபாய் 1400 ஐ எடுத்து விட்டு மீதி பணத்தை கொடுத்தேன். உடனே அவர் உங்களின் டெமோ சிம்மை பிளாக் செய்துவிடுவேன் இனி உங்கள் கடைக்கு வரமாட்டேன் என்று கூறினார்.
ஜெபிஆர்ஏஜென்சியிடம் கேட்டபோது இனிமேல் உங்கள் கடைக்கு ஈசி போட முடியாது என்றார். இது குறித்து உங்களின் சி.எஸ்.எம். திரு. ஹரீஷிடம் தகவல் தெரிவித்தும் அவர் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றார். கடந்த பத்து நாட்களாக நான் நாகர்கோவிலில் இருந்து வோடாபோன் கார்டுகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதோடு ஈசி ரீசார்ஜ்களை வேறு கடைகள் மூலமாக செய்து வருகிறேன். தற்போது வோடாபோன் ஆக்டிவேஷன்களை செய்வது இல்லை. மேலும் வோடாபோன் சிம்முகளுக்குப்பதிலாக ஏர்செல், ஏர்டெல் சிம்களை ஆக்டிவேஷன் செய்யவேண்டிய சூழல் எனக்கு உருவாகியுள்ளது.
ஆகவே நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு ஈசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
சிந்துகுமார் Was this information helpful? |
Post your Comment